Tamil News

Tuesday, January 17, 2012

அனோஷ்கா எங்களை கொள்ளை கொண்டுவிட்டாள்: ராதிகா..

அஜித், ஷாலினியின் மகள் அனோஷ்கா ஒரு அழகி என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தல அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, மகன் ராகுல் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர். அப்போது அஜித்தின் செல்ல மகள் தனது மனதைக் கொள்ளை கொண்டதாக ராதிகா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, அஜித் மகள் அனோஷ்கா ஒரு அழகி. அவள் எங்கள் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுவிட்டாள் என்று எழுதி புகைப்படமும் வெளியிட்டுள்ளார். அஜித் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது செல்ல மகளுடன் விளையாடி மகிழ்கிறார். ஷூட்டிங், ஷூட்டிங் என்று ஓடிவிடுவதால் மகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதால் அஜித் புத்தாண்டை மனைவி, மகளுடன் சிங்கப்பூரில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேடம்... சாரோட அடுத்த படத்துல சான்ஸ் வேணுமா....?

No comments:

Post a Comment