Tamil News

Tuesday, January 17, 2012

21 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பாரதிராஜா-கங்கைஅமரன்!

பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக, கங்கை அமரன் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் பாரதிராஜா இயக்கிய 'என் உயிர் தோழன்' என்ற திரைபடம் வெளியானது. பாபு, ரமா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் அனைத்து பாடல்களையும், கங்கை அமரன் எழுதி இருந்தார். இந்த நிலையில் நடிகர் அமீர், நடிகை இனியா, கார்த்திகா உள்ளிட்டோரின் நடிப்பில் பாரதிராஜா இயக்கி வரும் படம் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'. இப்படத்தில் வைரமுத்து, கங்கை அமரன் உள்ளிட்ட 2 பேரும் பாடல்களை எழுதி உள்ளனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இது குறித்து கங்கை அமரன் கூறியதாவது, கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜா இயக்கும் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன், என்றார். பழைய நினைவுகளை அசைபோட்டீங்களாக்கும்....?!

No comments:

Post a Comment